மதுரா, ஆக்ரா


ஆக்ரா பக்கத்தில் தானே இருக்கு ஒருநாள் போய் தாஜ்மஹால பாத்துட்டு வந்துடலாம் என்று என் அறை நண்பர்கள் இருவரிடமும் கேட்டேன். ஏற்கனவே அவர்கள் அங்கு சென்றிருந்ததால் வர மறுத்துவிட்டார்கள். அலுவலக நண்பனும் வர மறுத்த நிலையில் ஒரு டிராவல்ஸ்சில் விசாரித்து ஒரு நாள் பேக்கேஜ் ட்ரிப்க்கு முன்பதிவு செய்தேன்.

விடியற்காலையில் சொன்ன நேரத்தைவிட ஒரு மணிநேரம் கழித்து ஒரு காரில் வந்து என்னை வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு சென்றனர். அந்த வண்டி நேராக தென் டெல்லியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அழைத்து சென்றது அங்கு என்னை இறக்கிவிட்டு ஒரு வண்டி என்னை கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். ஒருமணிநேரம் கழித்து ஒரு பேருந்து அந்த என்னை சுமந்து வந்தது அட பள்ளிகூட சுற்றுலா போல இருக்கும்போல என்று எண்ணிக்கொண்டு வண்டியில் ஏறி பார்க்க வண்டி முழுவதும் நிரம்பிருந்தது நடுவில் ஒரு இருக்கையில் ஒருவர் மட்டும் அமர்ந்திருக்க அருகில் அமரசொன்னார்கள், சன்னலுக்கு அருகில் அமர விருப்பபடுபவர்களில் ஒருவன் என்பதால் அந்த இருக்கை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வண்டியின் இறுதி வரிசையில் சன்னலோரத்தில் அமர்ந்துக்கொண்டேன்.

என்னருகில் இரண்டு பெரியவர்கள் வெள்ளைநிற உடையில் தலையில் வெள்ளை தொப்பியுடன் அமர்ந்திருந்தனர், தாங்கள் வட கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்று அறிமுகபடுத்திக்கொண்டனர் வண்டியில் என்னைத்தவிர தமிழர்கள் இல்லை. இந்த பயணம் ஒரு தினுசாகத்தான் இருக்கபோகின்றது என்று எண்ணிக்கொண்டேன். அவர்கள் பேசிக்கொண்டிருந்த கன்னட வார்த்தைகளை எனக்கு தெரிந்த வார்த்தைகள் கொண்டு பொருத்திப்பார்த்தேன் ஒன்றும் பொருந்தவில்லை. பிறகு அவர்கள் கன்னடத்தை பற்றி தெளிவாக கூறினார்கள். பெங்களூர் கன்னடா என்பது தமிழ் கலந்த கன்னடா என்பதால் தமிழர்களுக்கு ஓரளவுக்கு புரியும் என்று கூறினார்கள். அதே போல் மங்களூர், வட கர்நாடகாவில் பேசும் கன்னடாவையும் பற்றி கூறக்கேட்டுக்கொண்டேன். வழியில் உணவிற்காக ஒரு உணவகத்தில் நிறுத்த ஒரு காபி மட்டும் வாங்கி குடித்துக்கொண்டேன்.

வண்டி சிறிது நேரத்தில் ஆக்ராவை நோக்கி கிளம்பியது அப்பொழுதுதான் தெரிந்தது ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருமாதறி பயணத்திற்கான பணம் வாங்கியது. இரண்டு மூன்று டிராவல்சை விசாரித்து ஏறுவது நல்லது என்றும் கூறினர் பின்பு தான் எனக்கு தெரியும் பல நிறுவனங்கள் தினமும் இது போல் தாஜ்மகாலை பார்க்க பயணம் ஏற்பாடு செய்கிறார்கள் என்று, பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நாங்கள் சென்ற பேருந்து அங்கும் இங்குமாக சாலையில் நடனமாடிக்கொண்டிருந்தது , ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் சாலையின் ஒரு ஓரத்தில் சென்று வண்டி நின்றது. டெல்லி - ஆக்ரா சாலை நாட்டின் முக்கியமான சாலைகளில் ஒன்று அதிக வண்டிகள் செல்லும் அந்த சாலையில் விபத்திலிருந்து தப்பியதே பெரியவிசயமாக தோன்றியது. வெடித்திருந்த டயரை கழட்டிவிட்டு ஏற்கனவே இருந்த டயரை ஓட்டுனர் மாற்றினார்.

வண்டி மதுராவை கடந்து ஆக்ரா கோட்டையை நோக்கி நகர்ந்தது சிறிது நேரத்திலேயே ஆக்ரா கோட்டையை அடைந்துவிட்டோம். இப்பொழுது ஒரு கைடு எங்களுக்காக அனுப்பபட்டிருந்தார். அவர் பெரும்பாலும் இந்தியில் கோட்டையை பற்றி சொல்லிக்கொண்டு வந்தார். பளிங்கி கட்டடத்தில் பதிக்க பட்டிருந்த சிகப்பு, ஊதா நிற கற்களை இமைகொட்டாமல் பார்க்க தோன்றியது. கட்டடகலை மிகவும் அற்புதமாக இருந்தது. பளிங்கினால் கட்டப்பட்டது அதன் கூடுதல் சிறப்பு. அரசரின் படுக்கையறையில் சுவர்களின் மத்தியில் இரண்டு குழிகளை காட்டினர். வெய்யில் காலத்தில் குளிந்தநீர் ஊற்றி குளிர்சாதன அறையாகவும் மற்றும் குளிர்காலத்தில் வெந்நீர் ஊற்றி அந்த அறையை வெதுவெதுபாகவும் வைத்துக்கொள்வார்கள் என்று கூறினார் அங்கிருந்து தாஜ்மகாலை பார்க்க அழகாக இருந்தது. அந்த கூட்டத்திலிருந்து தனியாக பிரிந்து மீனா பஜார்(பெண்கலுக்கு மட்டும் தான் அனுமதியாம் அந்த காலத்தில், இப்பொழுது காட்சிபொருள்), அரசவை, தூண்கள், கட்டடங்கள் அதில் உள்ள ஓவிங்கள் என்று ஒன்றுவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். கொடுத்த நேரம் முடிவதற்குள் வண்டிக்கு திரும்பினேன்.




மதிய உணவிற்காக ஒரு உணவகத்தில் நிறுத்தப்பட்டது அங்கு நம்மஊர் சாப்பாடு கிடைத்தது. உணவை முடித்துவிட்டு நேராக தாஜ்மகாலை நோக்கி புறப்பட்டோம் ஒரு குறுப்பிட்ட தூரத்திற்கு மேல் பொது வாகனங்களுக்கு அனுமதி கிடையாது அதனால் அங்குகிருந்து ஓட்டகவண்டி அல்லது சிறிய பேருந்தில் செல்லலாம், நாங்கள் சிறிய பேருந்தில் சென்றோம். வெளிநாட்டவருக்கு அதிகமாக நுழைவுகட்டணம் வசுலிக்கப்பட்டது. இந்தியர்களுக்கு குறைவுதான், உலக அதிசியத்தில் ஒன்று என்பதைவிட சிறுவயதில் இருந்து பிரமிப்பாக கேட்ட ஒன்றை பார்க்கபோகின்றோம் என்ற மகிழ்ச்சி இருந்தது. காவலர் சோதனைகளுக்கு பின்பு பொறுமையாக நடந்து சென்று இடதுபக்கம் திரும்பிய பொழுது சற்று தொலைவில் இருத்த தாஜ்மகாலை பார்த்தேன். அதே இடத்தில் சிறிது நேரம் நின்றுக்கொண்டு அதன் அழகை பார்த்துக்கொண்டிருந்தேன் என்னைப்போல் பலரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

தாஜ்மகாலை நோக்கி மெதுவாக நடக்கத்தொடங்கினேன் இரண்டுபக்கமும் புல்வெளிகள் மரங்கள் இருந்தன கட்டடத்தின் அருகில் காலணியை கழட்டிவிட்டு படிக்கட்டுகளின் வழியாக மேலே சென்று தாஜ்மஹாலுக்குல் நுழைந்தேன் அழகிய வேலைபாடுகளுடன் அந்த இடம் அற்புதமாக இருந்தது அதன் மைய்ய பகுதியில் அமைந்த கல்லறையை பார்த்தேன், அதன் மீதும் கலைநயத்துடன் வேலைபாடுகள் இருந்தது. கல்லறையை பார்க்கும் பொழுது அதற்குமுன் அங்கு கோவில் இருந்தது என்று என் நண்பன் கூறியது நினைவுக்கு வந்தது (மெய்யோ பொய்யோ எனக்கு தெரியாது) வெளியே சென்று அந்த மகாலின் பின் பகுதிக்கு சென்றேன். அழகான சூழல் அங்கிருந்து அருகில் ஓடிக்கொண்டிருக்கும் யமுனா நதியை பார்க்க அற்புதமாக இருக்கும். நதியில் ஓரிரு படகுகள் சென்றுகொண்டிருந்தது முழங்கால் உயர தடுப்பு சுவற்றுக்கு அருகில் அமர்ந்துக்கொண்டு (பின் புறம்) நதியை பார்ப்பதற்கு அழகாக இருந்தது, தாஜ்மகாலை விட அதன் பின் புறத்தில் அமர்ந்து நதியை பார்ப்பது மிகவும் பிடித்திருந்தது. குளிர்காலத்தில் சென்றதால் வெய்யில் இல்லை. (நண்பர்களுடனான அடுத்த பயணத்தில் மாலையிலிருந்து இருட்டும்வரை அதே இடத்திலிருந்து நதி மற்றும் தாஜ்மகாலை பார்க்க வாய்ப்புகிடைத்தது, அப்பொழுது தனியாக வாகனத்தில் சென்றதால் நேரத்தை கவனத்தில் கொள்ளவில்லை) கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து சிறிது நேரம் கழித்து வண்டிக்கு சென்றேன். ஆனால் என்னையும் சேர்த்து வண்டியில் பத்துப்பேர் கூட இருக்கவில்லை, அனைவரும் வரும் வரை காத்திருந்து வண்டி மதுராவை நோக்கி புறப்பட்டது.




வண்டி மதுராவை அடைந்ததும் நேராக கிருஷ்ணன் கோவிலுக்கு கூட்டிசென்றனர், கோவிலுக்குள் நுழையும் பொழுது கொண்டு சென்ற அனைத்து பொருட்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது, பையில் இருந்த தங்கராஜா வடிகட்டி மென்சுருட்டாரும் அவரது நண்பர் லைட்டரும் குப்பையில் தூக்கி வீசப்பட்டனர். பிறகு உடலை பரிசோதிக்கும் பொழுது நான் நெளிந்து கொண்டிருப்பதை பார்த்து இன்னும் திருமணம் ஆகவில்லையா என்று அந்த காவலர் கேட்டக, ஆமாம் என்று கூறினேன் உடனே கோவில் கோபுரத்தை பார்த்து பகைவன் சீக்கிரம் இவனுக்கு திருமணமாக அருள்புரி என்று அவர் கூற சிரித்துக்கொண்டே கோவிலுக்குள் நுழைந்தேன்


துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு மூலைக்கு மூலை காவலர்கள் நின்றுக்கொண்டிருந்தனர் எதேச்சையாக மேலே பார்க்க படங்களில் வருவது போல் ஆங்காங்கு காவலர்கள் நின்றுக்கொண்டு துப்பாக்கி வைத்துக்கொண்டிருந்தனர்.
கிருஷ்ணர் பிறந்த இடத்தில் அவரது படம் வைத்திருக்கின்றனர் நம்ம ஊர்களில் மிக பழையவீடுகளுக்குள் செல்வது போன்ற உணர்வு இருந்தது. அந்த இடத்தை பார்த்து பெரியதாக ஈர்ப்பு ஏதும் ஏற்ப்படவில்லை. (அடுத்த இரண்டு பயணங்களிலும் கூட) அங்கு ஒரு வயதான பெண்மணி இந்தியில் கிருஷ்ணன் புகழை பாடிக்கொண்டிருந்தார். பிறகு அந்த இடத்தை ஒட்டி மண்டபம் போல் இருந்த கோவிலுக்கு சென்றேன், சிலைக்கு திரை போட்டு மூடிருந்ததால் சிறிது நேரம் அங்கு அமர நேர்ந்தது கண்களை மூடிக்கொண்டு எதையோ நினைத்துக்கொண்டிருந்தேன். கண்களை திறந்து பார்க்கும்பொழுது திரைவிலகிருந்தது பளிங்கிபோன்ற கிருஷ்ணா, ராதா சிற்பம் கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு கவர்ந்தது (அப்பொழுது எனக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது). அதோடு அந்த சிலையை பார்பவர்களுக்கு கட்டாயம் திருமணம் செய்துகொள்ள தோன்றும் (திருமணம் ஆகாதவர்களுக்கு ), எனக்கு உடனே அந்த காவலரின் நினைப்பு வந்தது. கொடுத்த நேரம் முடிந்திருந்ததால் வண்டியை நோக்கி புறப்பட்டேன். அடுத்த இரண்டு பயணங்கள் மதுரா செல்ல அந்த சிலை என்னை கவர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.




வண்டி இப்பொழுது பிருந்தாவனை நோக்கி சென்றது அங்கு பல சிறு சிறு கோவில்கள் இருக்கின்றன முதல் முறை அங்கு சென்றபொழுது எனக்கு அது தெரியாது பிருந்தாவன் என்றால் ஒரு குறுப்பிட்ட புகழ் பெற்ற கோவிலுக்குத்தான் கூட்டிசெல்வார்கள் என்று நினைத்துவிட்டேன். அங்கு காசுக்கு இருந்த மரியாதை கிருஷ்ணனின் புகழை மிஞ்சிருந்தது. எனக்கு அன்று கூட்டி சென்ற கோவில் பிடிக்கவில்லை (இரண்டாவது முறை சென்ற கோவில் பிடித்திருந்தது கோவில் பெயர் நினைவில்லை) மதுரா மற்றும் பிருந்தாவனும் லெஸ்ஸி மற்றும் பால் பொருட்களுக்கு புகழ்பெற்றது, பார்க்கும் இடங்களில் எல்லாம் கிடைக்கும். லெஸ்ஸி மிகவும் நன்றாக இருந்தது.

பயணம் முடிந்து டெல்லியை நோக்கி கிளம்பினோம், இரவு பன்னிரெண்டை தாண்டியப்பின்தான் நான் ஏறிய இடத்துக்கு சென்றோம் பெட்ரோல் நிலையத்தின் எதிர் திசையில் இறங்கி, டிராவல்சுக்கு அழைக்க ரிங் போய் கொண்டே இருந்தது ஒருவரும் எடுக்கவில்லை, இனி இவர்களை நம்புவது வீண் என்று முடிவுசெய்து, அருகில் இருந்த ஆடோவை கேட்க வரமுடியாது என்று கூறிவிட்டார், வேறு ஆடோக்க்காக காத்திருந்து காத்திருந்து மணி ஒன்றுக்கு மேல் கடந்துவிட்டது. அருகில் ஒரு சுமோ போன்ற வண்டியில் இடுப்பில் கை துப்பாக்கியுடன் இருந்த காவலரிடம் எங்கு ஆட்டோ கிடைக்கும் என்று கேட்க அவர் பழைய ஆட்டோகாரரையே கை காட்டினர், அவர் வர முடியாதுன்னு கூறிவிட்டார் என்று கூற. என் கூட வா என்று அழைத்து சென்றார். ஏன் போகமாட்டேன்கிற என்று அவர் கேட்க சார் எனக்கு அங்க போக பெர்மிட் இல்ல என்று கூறி வேறு எங்கோ சென்ற ஆட்டோ ஒன்றை நிறுத்தி ஒரு இடத்தில் இறங்கி மாறிக்கொள் என்று அனுப்பிவைத்தார்.

அந்த ஆட்டோவில் என்னைத்தவிர ஐந்தாறு பேர் இருந்திருக்கக்கூடும். வண்டி ஓட்டுனரிடம் நான் போக வேண்டிய இடத்தை சொல்ல ஐயோ இது பரிதாபாத் போகுது என்று கூறிகொண்டிருக்கும் பொழுதே நிறுத்துங்கள் என்று கூறி ஒரு பாலத்திற்கு அடியில் இறங்கிக்கொண்டேன்.(இருந்த இடத்திலிருந்து இரண்டு கி.மீ கடந்திருப்போம்) பயபுள்ள ஏமாத்தி ஏத்திவிட்டுடானே என்று எண்ணிக்கொண்டு அடுத்த வண்டிக்காக காத்திருந்தேன். எந்தவண்டியும் நிற்கவில்லை. வேறு வழியில்லாமல் பாலத்திற்கு கீழ் ஒரு ஆடோவுக்குள் தூங்கிகொண்டிருந்தவரை எழுப்பி போகவேண்டிய இடத்தை சொல்லி வண்டி எதுவும் நிற்க்கமாட்டேன்கிது என்று கூற, இங்க எந்த வண்டியும் நிற்காது என்று கூறி, என் நிலைமையை பார்த்து என்னுடன் வர சம்மதித்தார், பர்மிட் இல்லாததால் அக்க்ஷ்யதாமை தாண்டி விட்டுவிடுகிறேன் அதற்க்கு மேல் வரமுடியாது என்று கூற நான் எதுவும் பேசாமல் சம்மதித்தேன்.

அக்க்ஷயதாமை தாண்டி என்னை இறக்கிவிட்டவுடன் மிக்கநன்றி என்று கூறி அவரை அனுப்பிவிட்டு அடுத்தவண்டிக்காக காத்திருந்தேன். செய்தித்தாள் எடுக்கவந்தவர் ஆடோவை நிறுத்த, நான் சவாரி ஏத்தக்கூடாது ஆனா உங்களை இந்தியன் ஆயில் வரை வேண்டுமானால் விட்டுவிடுகிறேன் என்று கூறி ஏற்றிக்கொண்டார் அங்கு சென்றவுடன் அவரை கூட்டிக்கொண்டு இரவு கடைக்கு (தள்ளுவண்டி கடை, அதுமட்டும்தான் இருக்கும் இரவில்) சென்று தேநீர், தங்கராசாவை வாங்கிகொடுத்து மற்றும் பேசியதொகையை(அவர் கேட்டதொகையை) கொடுத்துவிட்டு தங்கராஜா வடிகட்டி மென்சுருட்டாரை துணைக்கு அழைத்துக்கொண்டு வீட்டுக்கு நடக்கத்தொடங்கினேன் (அதற்குள் அதிகாலை ஆகிவிட்டது)

அடுத்தானாள் அந்த டிராவல்ஸ் எண்ணுக்கு தொடர்புகொள்ள தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தேன் ஆனால் யாரும் எடுக்கவே இல்லை...

(நான் பயணத்திற்கு முன்பதிவு செய்தது தொலைபேசியில், காசு வீடுதேடி வந்து வாங்கிக்கொண்டனர் அதனால் இறுதிவரை அந்த டிராவல்ஸ் எங்கு இருக்கின்றது என்றே பார்க்கவேயில்லை)

10 comments:

லோகு said...

இவ்ளோ பெரிய பதிவா?????????
அருமையான நடை.. ஒரு இடத்தில் கூட புரியாமல் போகவில்லை..

***********
ஆமா.. நீங்க சிங்கபூர் ல இருக்கீங்களா.. டெல்லில இருக்கீங்களா..

வினோத் கெளதம் said...

மச்சி சூப்பர் பதிவு எனக்கு நான் போனது நியாபகம் வந்து விட்டது..
அதுவும் ஆக்ரா கோட்டை அழகு..ரசித்து கொண்டே இருக்கலாம்..
தாஜ் மகால் சொல்லவா வேண்டும்..
மதுரா நான் போன பொழுது கரண்ட் இல்லை..இருட்டிலேயே அந்த ஊரை ரசித்தேன்..
கோவில் அந்த கிருஷ்ணா ராதா சிலை அழகு தான்..

Menaga Sathia said...

நல்லா அழகா எழுதிருக்கிங்க.நேரிலயே பார்க்கிற மாதிரி ஒரு ப்ரமை!!

குடுகுடுப்பை said...

அதற்குமுன் அங்கு கோவில் இருந்தது என்று என் நண்பன் கூறியது நினைவுக்கு வந்தது //

வெள்ளை அறிக்கை கேட்டு தாக்கல் பண்ணுங்க.

குடுகுடுப்பை said...

தங்கராஜா வடிகட்டி மென்சுருட்டாரை துணைக்கு அழைத்துக்கொண்டு வீட்டுக்கு நடக்கத்தொடங்கினேன்//

வில்ஸ்தான் சூப்பரு

ஆ.ஞானசேகரன் said...

அருமையான பயணக்கட்டுரை பாராட்டுகள்

வெற்றி-[க்]-கதிரவன் said...

//லோகு said...
இவ்ளோ பெரிய பதிவா?????????
அருமையான நடை.. ஒரு இடத்தில் கூட புரியாமல் போகவில்லை..

***********
ஆமா.. நீங்க சிங்கபூர் ல இருக்கீங்களா.. டெல்லில இருக்கீங்களா..
//

நன்றி லோகு

*****

வினோத் நன்றி மச்சி

*****

//Mrs.Menagasathia said...
நல்லா அழகா எழுதிருக்கிங்க.நேரிலயே பார்க்கிற மாதிரி ஒரு ப்ரமை!!
//

நன்றி சிஸ்டர்

வெற்றி-[க்]-கதிரவன் said...

//குடுகுடுப்பை said...
தங்கராஜா வடிகட்டி மென்சுருட்டாரை துணைக்கு அழைத்துக்கொண்டு வீட்டுக்கு நடக்கத்தொடங்கினேன்//

வில்ஸ்தான் சூப்பரு
//

இதை தாறு மாறாக வன்மையாக கண்டிக்கறேன்.

இப்பொழுது நான் டிவேர்ஸ் செய்து இருந்தாலும் கிங்க்ஸ்சே சிறந்தது

வெற்றி-[க்]-கதிரவன் said...

//ஆ.ஞானசேகரன் said...
அருமையான பயணக்கட்டுரை பாராட்டுகள் //

நன்றி நண்பா

வெற்றி-[க்]-கதிரவன் said...

//கலையரசன் said...
வாழ்த்துகள்,

உங்களின் இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது...
//

நன்றி கலை