கோடா திங்கி - ஜோகூர், மலேசியா

*

முதல்நாள் மாலை நண்பர் அழைத்து கோடா திங்கி போலாமா என்று கேட்க உடனே ஒத்துக்கொண்டேன். ஊர் சுற்ற வேண்டான்னா சொல்ல போறோம். அடுத்தநாள் காலை பத்துமணிக்கு மேல் ஜோகூர் இமிக்றேசனை அடைந்தோம். என்னுடைய கடுவுசீட்டு மற்றும் விசாவை அலுவலர் பார்த்து உங்கள் பெயர் என்று கேக்க, பக்கத்திலிருந்த அதிகாரி சிரித்துக்கொண்டே சாருக்கானா ? (உண்மையாக தான் ) என்று கேட்க ( மலாய்காரர்கள் இந்தி சினிமாவை பார்பார்கள்), சிரித்துக்கொண்டே என்னுடைய பெயரை கூற, ஆவணத்தை சரிபார்த்துவிட்டு அனுமதித்தார்.

ஜே.பி டவுனில் வழக்கமாக செல்லும் உணவகத்திற்கு சென்று, காலை உணவை முடித்துக்கொண்டோம். (நிர்வாகம் மாறியிருந்தது உணவின் தரமும் சரியில்லை), அங்கு பசும்பால் காப்பி கிடைக்கததால் அருகிலிருந்து மற்றொரு உணவகத்திற்கு சென்று காப்பி குடித்துவிட்டு, முக்கிய சாலைக்கு வந்து டேக்சிக்காக காத்திருக்க ஒரு மலாய்காரர் வண்டி வந்தது, 40 ரிங்கிட்டுக்கு அருவி வரை வர சமதிக்க உடனே நாங்கள் மூவரும் ஏறிக்கொண்டோம், ஜோகூர் பக்ருவிலிருந்து கோடா திங்கி டவுன் வரை 42 கி.மீ அங்கிருந்து அருவிக்கு 14 கி.மீ செல்லவேண்டும்.

மலேசிய தேசிய நெடுங்சாலைகளில் பயணிப்பதே தனி சுகம்தான், அகலமான சாலை, சாலைகளின் இருபுறமும் பசுமையான மரங்கள், அதை ரசித்துக்கொண்டே சென்றோம் கோடா திங்கி நகரத்துக்கு சில கி.மீ முன்பு சாலை விபத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட பயணம் தாமதமானது, நாப்பத்தி ஐந்து நிமிடங்களில் செலவேண்டிய இடத்துக்கு ஒன்னரை மணிநேரம் பயணம் செய்யவேண்டி இருந்தது, அருவின் முகப்பை அடைந்த பொழுது ஒரு மணிக்கு மேல் இருக்கும். நெரிசலின் காரணமாக நேரம் அதிகமானதை காரணமாக கொண்டு அதிக பணம் கேட்க அவர் கூச்சப்பட நாங்களே 50 ரிங்கிட் கொடுத்தோம், திரும்பி வரும் நேரத்தை நாங்கள் சொல்ல அவர் காத்திருப்பதாக கூறினார்.



நபர் ஒன்றுக்கு பத்து ரிங்கிட் நுழைவுகட்டணம் வசுளிக்கப்பட்டது, அதிகம் என்று தோன்றியது, ரிசாட்டுக்கு சென்று ஒரு லாக்கரை எடுத்து முக்கியமானவற்றை வைத்துவிட்டு அருவியை நோக்கி நடக்க தொடங்கினோம், அருவியை பார்த்ததும் சிறிது ஏமாற்றம், மிக சிறிய அருவி, நீரில் காலைவைக்க முதலில் முடியவில்லை பிரீசரில் இருந்து எடுத்த தண்ணியை போல, ஜில்லென்று இருந்தது, நீருக்கடியில் அதிக கற்கள் இருந்ததால் பொறுமையாக நீரில் நடந்து சென்று தண்ணீர் கொட்டும் இடத்தை அடைந்தோம். நீரின் வேகம் சிறிது நேரத்திலேயே கூடிவிட்டது. அருவியில் குளித்துவிட்டு அறிகிலிருந்த பாறையில் அமர அருவி சாரல் பட இதமாக இருந்தது. அருவி நீர் ஓடும் பாதையில் நீச்சல் குளம் போல ஒரு பகுதி இருந்தது மூன்றடி ஆழம்தான் இருக்கும்.




அங்கு சென்று ஒரு டுயுபை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நெடு நேரம் நீரில் மிதந்துகொண்டிருந்தேன், ரைடு போவதற்கு வடிவமைக்கபட்டிருந்தது பாதையில் இரண்டு மூன்று ரைடு சென்று விட்டு மீண்டும் நீரில் குளித்துகொண்டிருக்கையில் இரண்டு தமிழ் குடும்பத்தை பார்க்க முடிந்தது, ஜில்லென்று இருந்ததால் நீரில் காலை வைக்க பயந்து கொண்டிருந்த மலசிய தமிழ் இளைஞரை அவரது மற்ற தமிழ் நண்பர்கள் ஒட்டிகொண்டிருந்தனர் என்னை பார்த்து அவர் புன்னகைக்க பதிலுக்கு நானும் புன்னகைத்தேன். நேரம் நான்கை தொட்டிருந்ததால் கிளம்ப ஆயத்தமானோம். உடையை மாற்றிவிட்டு லாக்கரிலிருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு, முகப்புக்கு சென்றால் அங்கு டேக்சி இல்லை பதினைத்து நிமிடம் காத்திருந்தும் வரவில்லை, நுழைவுசீட்டு கொடுத்தவரிடம் கேட்க நாங்கள் வந்த டேக்சி சென்றுவிட்டதாகவும் வேறு டேக்சி வேண்டும் என்றால் அழைக்கவேண்டும் என்றும் கூறினார் (கோடா திங்கி வரை செல்ல 25, ஜே.பி வரை செல்ல 65 ரிங்கிட் )

கோடா திங்கி சென்று மதிய உணவை முடித்துவிட்டு செல்லலாம் என்று முடிவுசெய்திருந்ததால் கோடா திங்கி வரை செல்ல ஒரு டேக்சி கேட்டோம், அவர் அவரது அலைபேசியிலிருந்து அழைத்துக்கொண்டிருக்கும் பொழுதே வெளியே ஒரு கார் வந்து நின்றது, கேட் திறந்தவுடன் எங்களை பார்த்து டவுனுக்கு போகனுமா என்று கேக்க நாங்கள் ஆம் என்றோம், தன்னுடனே வரலாம் என்று கூறினார் (வாடகை வண்டி அல்ல) பணம் வாங்கவும் மறுத்துவிட்டார், சீட்டு கொடுபவரிடம் டேக்சி வேண்டாம் என்று கூறிவிட்டு வந்தவர் வண்டியிலேயே சென்றோம், வண்டியில் தமிழ் திரைப்பட பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது, எங்களுக்கு லிப்ட் கொடுத்தவர் மலேசிய தமிழர், தான் ஜே.பியை சேர்ந்தவர் என்று கூறினார், பேருந்து நிலையம் எங்கிருக்கிறது என்று சரியாக தெரியாததால் ஒரு குறிபிட்ட இடத்தில் இறங்கிகொண்டோம், மதியஉணவை பீசா ஹட் இருந்தால் அங்கே முடித்துக்கொல்லாம் என்று நண்பர் சொல்ல சிறிது தூரத்திலேயே ஒரு பீசா ஹட் இருந்தது, அங்கு மதிய உணவை முடித்துவிட்டு டேக்சிக்காக பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினோம்.

ஜே.பி இமிக்றேசன்வரை செல்ல 40 ரிங்கிட் என்று பேசி ஒரு டேக்சியை பிடித்தோம், ஓட்டுனர் தமிழர், வண்டி எடுத்தவுடனே தமிழ் எப்.எம்க்கு மாற்றிவிட்டார். இனிமையான பாடல்களை கேட்டுக்கொண்டே ஜே.பி டவுனை 45 நிமிடங்களில் அடைந்துவிட்டோம், பசும்பால் காப்பி குடித்துவிட்டு செல்லலாம் என்று தோன்றியது ஆனால் நேரமின்மையை கருத்தில் கொண்டு வீட்டுக்கு திரும்பநேரிட்டது.

குறிப்பு : லர்கினிலிருந்து(ஜே.பி) கோடா திங்கி வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன (ஜே.பி டவுன், இமிகிரேசன் முடித்து அதன் வாசலிலேயே ஏறிக்கொள்ளலாம்), கட்டணம் 5 ரிங்கிட்டுக்கு குறைவுதான், ஆனால் கோடா திங்கி நகரிலிருந்து அருவிக்கு செல்ல டேக்சி எடுக்கவேண்டும் (கட்டணம் 15 முதல் 25 ரிங்கிட் பேசுவதை பொருத்து). சிங்கை மற்றும் ஜோகுரிலிருபவர்கள் ஒருநாள் சென்றுவர சிறந்த இடம்.

14 comments:

லோகு said...

//உங்கள் பெயர் என்று கேக்க, பக்கத்திலிருந்த அதிகாரி சிரித்துக்கொண்டே சாருக்கானா ? (உண்மையாக தான் ) என்று கேட்க //
உங்க பெயர் அதை விட பெரிய ஸ்டாரோட பேருன்னு சொல்லி இருக்கலாம்.. யாரடிச்சா, பொறி கலங்கி, பூமி அதிருதோ அவரோட பேரு ல..

லோகு said...

மீண்டும் நல்ல பயணக் கட்டுரை .... அந்த இடத்தை பற்றி இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்..

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பயணக்கட்டுரை... நான் இன்னும் போகவில்லை.. முடிந்தால் போகலாம் என்று இருக்கின்றேன்

RVRPhoto said...

எனக்கு, மிக பிரயோசனமான தகவல் . நன்றி

கோவி.கண்ணன் said...

நல்ல விவரிப்பு, சென்று வரும் ஆவல் தூண்டுகிறது

அ.மு.செய்யது said...

சுவாரசியமான பயணக்கட்டுரை.

ஆமாம் ஜோஹர் பஹாரில் ரப்பர் மரங்கள் அதிகமாமே !!! உண்மையாவா ?

யாசவி said...

try nila restaurent taste better


kotta tinggi is very cool water and remote place.

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி லோகு (நெக்ஸ்ட் ட்ரை பண்றேன்)

நன்றி ஞானசேகரன்

நன்றி பிரதீபன்

நன்றி கோவியாரே

நன்றி செய்யது (நா காட்டுக்குள்ள எல்லாம் போனதுஇல்லை -:))

நன்றி யாசவி (முதல் முறை அங்கதான் ட்ரை பண்ணினேன் )

ஜோசப் பால்ராஜ் said...

போகணும்னு பலமுறை ப்ளான் பன்ணி முடியாம போச்சுங்க.
சீக்கிரம் போகனும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோடா திங்கி வரை செல்ல ஒரு டேக்சி கேட்டோம், அவர் அவரது அலைபேசியிலிருந்து அழைத்துக்கொண்டிருக்கும் பொழுதே வெளியே ஒரு கார் வந்து நின்றது, கேட் திறந்தவுடன் எங்களை பார்த்து டவுனுக்கு போகனுமா என்று கேக்க நாங்கள் ஆம் என்றோம், தன்னுடனே வரலாம் என்று கூறினார் (வாடகை வண்டி அல்ல) பணம் வாங்கவும் மறுத்துவிட்டார், சீட்டு கொடுபவரிடம் டேக்சி வேண்டாம் என்று கூறிவிட்டு வந்தவர் வண்டியிலேயே சென்றோம், வண்டியில் தமிழ் திரைப்பட பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது, எங்களுக்கு லிப்ட் கொடுத்தவர் மலேசிய தமிழர், தான் ஜே.பியை சேர்ந்தவர் என்று கூறினார்,//

நல்ல மனிதர் போலும்...
நான் மலேசியா செல்லும் போது இது போன்ற நல்ல அனுபவங்கள் ஏற்பட்டதில்லை.

இருந்தாலும்... உங்களுக்கு நல்ல தைரியம் விஜய்...
பாத்து சூதனமா நடந்துக்குங்க.
இனி போறவங்கள சொல்றேன்...

பதிவு நன்று!

ஜெகதீசன் said...

நல்ல விவரிப்பு, சென்று வரும் ஆவல் தூண்டுகிறது

ஜெகதீசன் said...

சுவாரசியமான பயணக்கட்டுரை.

ஆமாம் ஜோஹர் பஹாரில் ரப்பர் மரங்கள் அதிகமாமே !!! உண்மையாவா ?

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி பால்ராஜ் (நவம்பர்ல போங்க இன்னும் நல்லருக்குமாம்)

நன்றி ஜோதி அண்ணே

நன்றி ஜெகா

நாடோடி இலக்கியன் said...

படிக்கும் போதே போகனும் போல இருக்கு விஜய். நல்ல நடை.


அடுத்த முறை நானும் வருகிறேன். முன் கூட்டியே சொல்லிடுங்கப்பா.